Saturday, February 14, 2015

ஒரு முறையாவது காதலிக்கப்படவேண்டும்

காதலிக்கும்போது
வானத்தை தொட்டுவிடலாம் போலிருக்கும்.
காதலிக்கப்படும்போது
வானம் நம்மைத் தொடுவது போலிருக்கும்.
விண்ணைத் தாண்டலாம் - ஆனால்
ஒருபோதும் காதலைத் தாண்டமுடியாது.
வானம் பறப்பதை சுகம் எனச் சொல்லும்.
காதல் சிறைப்படுவதை சுகம் என உணர்த்தும்.
காதலுக்கென்று ஒரு வானம் உண்டு.
அங்கே காதல் மேலே
வானம் கீழே!
நாம் ஒரு முறை கூட காதலிக்காமலிருக்கலாம் - ஆனால்
ஒரு முறையாவது காதலிக்கப்படவேண்டும்.
உண்மைக் காதல் நாம் நம் மனதில் இருப்பதல்ல.
மற்றவர் மனதில் வசிப்பது.
நான் உங்கள் மனதில் இருக்கிறேனா?

No comments: