Sunday, July 13, 2014

தங்ஸ்வீட்ஸ் - ஜீலை பௌர்ணமி



அழும் அக்காள் குழந்தைக்கு 

தாலாட்டு பாடிக்கொண்டே,
உஷ்ஷ்ஷ் பேசாதே என சுட்டு விரலாலே 
சத்தமின்றி ஆணையிட்டு,
பாத்திரம் ஒதுக்கி, துணி மடிக்க வைத்து
வீட்டை சுத்தம் செய்ய வைத்தபின்,
குழந்தையை தொட்டிலில் கிடத்தி
சைகையாலேயே 
அது உறங்கும் அழகை இரசிக்கச்சொல்லி,
தேவதைகள் உலகிற்கு அழைத்துச் செல்வாள் தங்கை!

No comments: