Thursday, March 6, 2014

யாதுமானவள்

பெண்ணின்றி அமையாது உலகு!

மலராகவும், வேராகவும், செடியாகவும் உலகை அலங்கரிப்பவளே பெண். பெண் என்றாலே உன்னதம்தான். அப்படி இருக்கையில் உன்னதமான பெண் எப்படி இருப்பாள்?

இருவரின் தேடல் . . . யாதுவமானவள் - நான் இயக்கியுள்ள குறும்படம். படம் வெளிவந்து இரு வருடங்கள் ஆகிவிட்டது. ஆனாலும் என் மனதுக்கு நெருக்கமான படம். படத்துக்கு ஜப்பானிய மொழியில் சப்டைட்டில் இணைத்து இன்னொரு வெர்ஷன் தயார் செய்திருக்கிறேன். ஏன் என்று படம் பார்த்தவுடன் புரிந்து கொள்வீர்கள்.

நண்பர் ஒருவர் இதனை நெடும்படமாக எடுக்க முயற்சி செய்யுங்களேன் என்றார். அது பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன். பார்த்துவிட்டு உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்று சொல்லுங்கள்.

இந்தப் படத்தை ஏற்கனவே சிலரிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். இருந்தாலும் மகளிர் தினத்தை முன்னிட்டு மீண்டும் ஒரு முறை பகிர்ந்துகொள்கிறேன். என்னை எனக்கே அடையாளம் காட்டிய பெண்கள் அனைவருக்கும் இத்திரைப்படம் சமர்ப்பணம்.


No comments: