Sunday, March 23, 2014

மதிப்பிற்குரிய அதிமுக கட்சித்தலைவியே

மதிப்பிற்குரிய அம்மா அவர்களுக்கு என்றுதான் எழுத நினைத்தேன். ஆனால் அம்மா என்பது அரசாங்க இட்லி கடையின் பெயர் மட்டுமே. அது உங்களை குறிக்கவில்லை என்று தேர்தல் கமிஷன் கூறிவிட்டதால் அப்படி எழுதமுடியவில்லை.

பிறகு மதிப்பிற்குரிய முதலமைச்சர் என்று எழுத நினைத்தேன். ஆனால் உங்கள் கட்சிக்காரர்களே நீங்கள் முதல்வரல்ல, வருங்காலப்பிரதமர் என்று சொல்வதால் அதையும் தவிர்த்துவிட்டேன்.

அதனால் அதிமுக கட்சித்தலைவியே என்று ஆரம்பித்து ஒரு விண்ணப்பம். மேடைக்கு மேடை திமுகவிடமிருந்தும், காங்கிரசிடமிருந்தும் எங்களை காப்பாற்றப்போவதாக முழங்கிக் கொண்டிருக்கிறீர்கள். ரொம்ப சந்தோஷம்.. ஆனால் அதற்கும் முன்பே, எங்களை டாஸ்மாக் சாக்கடையிலிருந்தும், பவர்கட் இருட்டிலிருந்தும், கொசுக்கடி வியாதியிலிருந்தும் காப்பாற்றும்படி கேட்டுக்கொள்கிறேன்.

தமிழக மக்கள் அனைவரையும் காப்பாற்ற முடியவில்லை என்றாலும் உங்கள் ஹெலிகாப்டர் வானத்தில் பறக்கும்போதே தரையில் உருண்டு புரண்டு வணக்கம் தெரிவிக்கும் அடிமைகளை மட்டுமாவது காப்பீர்கள் என்று நம்புகிறேன்.

இவண்
கடந்த சட்டமன்றத் தேர்தலில் உங்கள் கட்சிக்காக வாக்கு சேகரித்தவர்களில் ஒருவன்.

3 comments:

ananthu said...

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல இருக்கிறது சின்ன பதிவு . வாழ்த்துக்கள் ...

Unknown said...

ammaavin adimaigal peruki kondey povathu ennavo unmai..ammaavin chotthu kuvippu vazhakku... paarkkaponaal ithu voor arintha unmai.. aanaal court vaaithaa ena ammaa jammaaithukondu irukkiraargal.. ithil neethiyaavathu onraavathu.. ammaavin katchi -- aam.. ammaa Draavida munnetra kazhakam enru peyar maatram seyyalaam..

Unknown said...

திமுகவிடமிருந்தும், காங்கிரசிடமிருந்தும் எங்களை காப்பாற்றப்போவதாக முழங்கிக் கொண்டிருக்கும் அம்மா அவர்களுக்கு நாங்கள் உங்கள் ஆட்சியில்தான் இருக்கிறோம் என்பதை நினைவு படுத்தவும்