Tuesday, July 3, 2012

காத்திருப்பின் உன்னதம் . . .


சிட்டுக் குருவி சிட்டுக் குருவி
சேதி தெரியுமா?
என்னை விட்டுப் பிரிஞ்சி போன கணவன்
வீடு திரும்பல..

நேற்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் எம்.எஸ்.ராஜேஸ்வரி, காலங்கள் விழுங்கிய தன் குரலை மீட்டெடுக்கும் முயற்சியில் பாடிக் கொண்டிருந்தார். அப்போது தோன்றிய எண்ணம் இது.

காத்திருத்தலின் சுகத்தை நாம் இழந்துவிட்டோமோ?

கணவனுக்காக மனைவியும்
காதலிக்காக காதலனும்
பள்ளிக் குழந்தைக்காக அம்மாவும்
டிபன் பாக்ஸில் பங்கு தருவதற்காக நண்பனும்
தங்கை வைக்கும் மீதிக்காக அக்காவும் . . .

காத்திருப்பதில்தான் எத்தனை வகைகள், எத்தனை பரிவுகள், எத்தனை வலிகள், எத்தனை சுகங்கள்...

காத்திருத்தல் என்பது தற்போது நெரிசல் மிகுந்த சாலைகளில் மட்டுமே நிகழ்கிறது.

எங்கள் தெரு முனையில் தினமும் மாலை 3.30 மணிக்கு ஒரு பெரியவர் நின்று கொண்டிருப்பார். அவர் நிற்காவிட்டாலும், அவருடைய பேரனைச் சுமந்து கொண்டு வரும் பஸ் அங்கே நிற்கும்.  ஆனாலும் மழையோ, வெயிலோ அங்கேயே நிற்பார். பஸ்ஸை விட்டு இறங்கியதும், அவரை ஓடி வந்து கட்டிக் கொள்ளும் அந்தச் சிறுவனின் அணைப்பும், குதூகலமும்   காத்திருப்பின் உன்னதங்களைச் சொல்லும் குறுங்கவிதை!

சியர்ஸ் மக்காஸ்! உங்களுக்காக காத்திருக்கிறேன், நிறைய புன்னகைகளை தேக்கிக் கொண்டு!

No comments: