Monday, July 2, 2012

கல்யாண மண்டப புரோக்கராக அவதாரம் எடுத்திருக்கும் ஜெ.வுக்கு ஒரு கடிதம்

மாண்புமிகு கல்யாண மண்டப புரோக்கரம்மாவுக்கு வணக்கம்,


ஒரு புத்தகத்தை இருமுறை வாசிப்பதை விட, ஒரு கல்யாணத்தையே இருமுறை செய்வது நல்லது என்று சமீபத்தில் நடந்த 1006 கல்யாண வைபவத்தில் நிரூபித்தீர்கள். 

அதே போல, நூலகங்களுக்குப் போய் புத்தகம் படிக்கும் ஆர்வலர்களை விட, நூலகங்களில் கல்யாணம் செய்து கொள்ள விரும்புபவர்கள் அதிகம் என நீங்கள் தற்போது கண்டுபிடித்திருக்கிறீர்கள். பாராட்டுகள்!

அண்ணா நூற்றாண்டு நூலகக் கட்டிடத்தை தற்போது திருமண மண்டபமாக மாற்றி வாடகைக்கு விட்டிருப்பதன் மூலம், தமிழகத்தில் தலை சிறந்த கல்யாண மண்டப புரோக்கராக உயர்ந்திருக்கிறீர்கள்.

இதே போல, உங்கள் போயஸ் கார்டன் வீட்டின் ஒரு பகுதியையும், கொட நாடு கெஸ்ட் ஹவுஸின் ஒரு பகுதியையும் திருமண மண்டபங்களாக அறிவித்துவிட்டால், மண்டபம் கிடைக்காமல் திண்டாடும் தமிழகம் உங்களை வாழ்த்தும். ஒரே ஆண்டில், நூறாண்டு கல்யாண மண்டப புரோக்கர்களையும் மிஞ்சியவர் என்ற புகழும் உங்களுக்கு கிடைக்கும்.

இப்படிக்கு,
நூலகங்களில் கல்யாண மண்டபங்களை விரும்பாத ஒரு சாதாரணன்.

(பின் குறிப்பு - The Hinduவில் வெளியான ஒரு செய்திக் குறிப்பின் அடிப்படையில் இது எழுதப்பட்டுள்ளது)

No comments: