Thursday, July 5, 2012

தமிழக அரசின் 24 மணி நேர குடி சர்வீஸ்!


24 மணி நேரமும் குடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு ஒரு நற்செய்தி. சென்னை மற்றும் திருச்சியிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் இனி 24 மணி நேரமும் குடி சப்ளை செய்யலாம் என்று தமிழக அரசு ஒரு ‘செம ஹாட்டு மச்சி‘ அறிவிப்பை வெளியிட்டடிருக்கிறது. ஆனால் சைட் டிஷ் சப்ளை செய்யலாமா என்பது பற்றி அந்தக் குறிப்பில் சைடு தகவல் எதுவும் இல்லை.

சர்வதேச விமான நிலையங்கள் உள்ள நகர்களுக்கு மட்டுமே இந்த அறிவிப்பு செல்லும். டாஸ்மாக்கர்கள் 24 மணி நேரமும் குடி நீர் சப்ளை இல்லை என்றால் கூட பொறுத்துக் கொள்வார்கள். கடை மூடிய பின்னும் ஷட்டர் கேப் வழியாக எப்படியாவது வாங்கி இன்னொரு கட்டிங் அடிப்பார்கள். ஆனால் தமிழகத்திற்கு வரும் வெளிநாட்டினருக்கு இந்த கட்டிங் திறமை இல்லாததால், அவர்கள் வசதிக்காக இந்த 24 மணி நேர குடி சர்வீஸ் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் செய்திக் குடிப்பு...ஸாரி.. செய்திக் குறிப்பு தெரிவிக்கின்றது.

இந்த அறிவிப்பால் இனி 24 மணி நேரமும் பீர் கிளாஸ் நிரப்பும் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த முடியும் என்று குடிகார வட்டாரங்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளன.

No comments: