Thursday, July 5, 2012

என்ன செய்கிறார் கவுன்சிலர் (வார்டு எண் 113) - போயஸ்கார்டனுக்கு அருகிலேயே கழிவு நீர் அடைப்பு

பாபு தெருவுக்குள் நுழைந்தால் 3 ஆச்சரியங்கள் வரும்.

முதல் ஆச்சரியம், போயஸ்கார்டனுக்கு அருகில் இவ்வளவு குறுகலான தெருவா என்பது.
இரண்டாவது ஆச்சரியம், மனிதக் கழிவுகள் மிதக்கும் சாக்கடை நீர் அடைத்துக் கொண்டிருக்கும் அந்த தெருவுக்குள் மூக்கைப்பிடித்துக் கொண்டு மக்கள் எப்படி வசிக்கிறார்கள் என்பது.
மூன்றாவது ஆச்சரியம், போயஸ்கார்டனுக்கு அருகிலேயே இருந்தும், வார்டு (எண்.113) கவுன்சிலர் உதாசீனமாக நடந்து கொள்வது.

பலமுறை எடுத்துச் சொல்லியும் வார்டு கவுன்சிலர் கண்டு கொள்ளவில்லை என்பது பாபு தெருவாசிகளின் குற்றச்சாட்டு.  கவுன்சிலர் அலுவலகத்தினர் கடந்த ஒரு வாரகாலமாக இதோ பார்க்கிறோம், உடனே பார்க்கிறோம் என்று ஒரே பதிலை சொல்லிக் கொண்டிருக்கிறார்களாம். இதுவரை கவுன்சிலர் நேரடியாகப் பேசவில்லை என்பது மற்றொரு குற்றச்சாட்டு.

ஏதோ நம்மால் ஆனது. நண்பர்கள் துணையுடன், கார்ப்பரேஷன் கமிஷனர் மற்றும் மேயர் ஆகியோரின் உடனடி கவனத்துக்கு கொண்டு செல்ல முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். விரைவில் கழிவு நீர் அகற்றப்பட்டு நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையுடன்!

No comments: