Thursday, February 16, 2012

உதவி செய்ய நல்ல மனது மட்டும் போதாது!



சார் ஒரு உதவி!

முதன் முதலாக அந்தக் குரலை ஃபோனில் கேட்கிறேன். இணையத்தில் பல மாதப் பழக்கம் என்றாலும், அந்த போன் தான் முதல் ஃபோன் உரையாடல். தொடர்பு எல்லைக்கு அருகில் இருந்த ஃபோனின் கரகரப்பும், அவருடைய குரலில் இருந்த தயக்கமும் வார்த்தைகளை விழுங்கின. ஆனாலும் விஷயம் புரிந்துவிட்டது. நண்பருக்கு உடனடி பணத் தேவை!

அவர் கேட்ட தொகை முழுவதையும் தரக்கூடிய சூழலில் நான் இருக்கவில்லை, ஆனாலும் மற்ற நல் உள்ளங்களைக் கேட்டு அந்த தொகையை திரட்டிவிட முடியும் என்பதால், உதவி செய்வதாக சம்மதித்தேன். 
ஆனால் . . .

அதன் பிறகு வேலை அழுத்தத்தில் அவருடைய குரலையும், தேவையையும் மறந்தே போனேன். மறுநாள் மீண்டும் ஒரு வெளியூர் பயணத்தில் இருந்தபோது, நள்ளிரவில் பஸ்ஸில் இருக்கும்போது, அவருடைய ஞாபகம் வந்துவிட்டது. 

அடடா... உதவியும் செய்யாமல், மறுக்கவும் இல்லாமல் இப்படி அவரை தவிக்க வைத்துவிட்டோமே என்று கவலைப்பட ஆரம்பித்துவிட்டேன். ஆனால் நல்ல வேளையாக அதிகாலையிலேயே அவருக்கு தேவையான உதவி கிடைத்துவிட்டதாக செய்தி கிடைத்தது. அதில் ஒரு நிம்மதி என்றாலும், இப்படி சொதப்பி விட்டோமே என்ற உளைச்சலில் இருந்து தப்பிக்க முடியவில்லை.

நீதி -  உதவி செய்வதற்கான மனம் இருந்தால் மட்டும் போதாது. சரியான நேரத்தில் உதவ வேண்டும்.