Sunday, September 4, 2011

எல்லாம் மறந்த தருணம்

ஒலித்துக் கொண்டிருந்த தொலை பேசி,
தொலைக்காட்சியில் திரைப்படம்,
கொறித்துக் கொண்டிருந்த சிப்ஸ்,
அருகில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை - உட்பட
எல்லோரும் எல்லாமும் மறந்து போனது!

அந்தப் பட்டாம்பூச்சி
மின்விசிறியில் அடிபடாமல்
ஜன்னல் வழியாக வெளியேறும் வரை!

8 comments:

MANO நாஞ்சில் மனோ said...

முதல் மழை என்னை நனைத்ததே....

MANO நாஞ்சில் மனோ said...

சூப்பரா இருக்கே கவிதை....!

Rathnavel Natarajan said...

அருமை.

சத்ரியன் said...

செல்வா அண்ணே,

நெடு நாட்களுக்குப் பிறகு ஒரு அழகிய கவிதை.

குறையொன்றுமில்லை. said...

மிகவும் அழகான கவிதை வாழ்த்துக்கள்.

Thenammai Lakshmanan said...

super.:0

உணவு உலகம் said...

தன்னலமில்லா அன்பு.

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

டியர் செல்வா சார் ....
ஒரு நிமிடம் நானும்
மௌனமாக ......
அந்தப் பட்டாம்பூச்சி
வெளியேறும் வரை!
எனக்கும்
எல்லாமும் மறந்து போனது
---நச்- கவிதை சார் .