Sunday, June 5, 2011

நம்மை பின் தொடரும் GPS - பயன்கள்(பாகம் - 2)


நீங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்டுகிறீர்கள்
சமீபத்தில் ஓரு Aircel விளம்பரம் பார்த்தேன். திருமணத்தின் போதே கிராமத்திற்கு சென்று சேவை செய்ய விருப்பம் தெரிவிக்கும் ஒரு பெண், இதே காரணத்தால் கணவனுடன் மனஸ்தாபம் கொள்கிறாள். இருவரும் பிரிகிறார்கள். மனம் பொறுக்காத கணவன், தனது 3G போன் வழியாக, தனது மனைவியின் செல்போன் இருக்கும் இடத்தை அறிந்து, அவளையும் அவளிருக்கும் கிராமத்தையும் கண்டுபிடித்து, மீண்டும் கரம் கோர்க்கிறான். சுமார் ஒரு நிமிடம் வரும் இந்த விளம்பரத்தில் மிக நேர்த்தியாக நடித்திருப்பார்கள் உறுத்தாத இசை. அதை விட முக்கியமானது, GPS வழியாக ஒருவர் இருக்கும் இடத்தை மிக எளிதாக கண்டுபிடிக்கலாம் என்பதை உணர்த்தியிருப்பது.

இந்த தொழில் நுட்பத்துடன் கைகோர்த்து, தான் இருக்கும் இடத்தை உணர்ந்த மின்னணு கருவிகள் (Location-aware devices) வந்துவிட்டன. அந்தக் கருவியில் (உதாரணமாக மொபைல் போனில்) பயன்படக் கூடிய மென் பெர்ருள்களும் (Applications) பெருகிவிட்டன. இவற்றிற்கு உதாரணமாக Google Maps மற்றும் அவற்றை அருமையாக பயன்படுத்தும் twitter உள்ளிட்ட தளங்களைச் சொல்லாம்.

அந்த ஏர்செல் விளம்பரத்தில் வரும் காதலர்களுக்கு மட்டுமல்ல, வியாபாரம் மற்றும் சுற்றுலா பயணத்தில் இருக்கும் அனைவருக்கும் இது மிகச் சிறந்த துணை.

GPS செயல்படும் விதம் பற்றி எளிய விளக்கம்
நான் முன்பு ஒரு முறை பாரத் பெட்ரோலியம் நிறுவனத்திற்கு ஒரு குறும்படம் செய்து தந்தேன். அதில் லாரி ஓட்டுனர்களுக்கு பெட்ரோல் நிரப்ப ப்ரீபெய்டு கார்டு தருகிறார்கள். அதில் GPS தொழல்நுட்பம் உண்டு. லாரி எங்கு சென்று கொண்டிருக்கிறது, விழுப்புரமா? பாண்டிச் சேரியா? என்பதை லாரி முதலாளி உட்கார்ந்த இடத்தில் இருந்து தனது லாப்டாப் வழியாக தட்டிப் பார்த்துக் கொள்ளலாம். லாரி எங்காவது நின்று கொண்டிருந்தால், எந்த இடத்தில் நிற்கிறது, எவ்வளவு நேரமாக நிற்கிறது என்பதை ஒரு மௌஸ்க்ளிக்கில் அறிந்து கொள்ளலாம். GPS பொறுத்தப்பட்ட அந்த smart cardக்கும், சாடிலைட்டுக்கும் அறுந்துவிடாத தொடர்பு உண்டு. எனவே அந்த கார்டு தொடர்ந்து சாடிலைட்டுகளால் கண்காணிக்கப்பட்டு அந்த விபரங்கள் ஒரு வெப்சைட்டில் சேமிக்கப்படுகின்றன. நீங்கள் அந்த வெப்சைட்டை பார்ப்பதின் மூலம், லாரி எங்கே இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும்.

GPS வேறெங்கெல்லாம் பயன்படுத்த முடியும்?
குழந்தைகளை பள்ளிக்கும்,கல்லூரிக்கும் அனுப்பிவிட்டு கவலைப் படவேண்டாம். அவர்களுடைய ஐடி கார்டில் GPS வசதி இருப்பின், அவர்கள் கல்லூரிக்குள் இருக்கிறார்களா? ஐநாக்ஸில் படம் பார்க்கிறார்களா? கிழக்கு கடற்கரைச் சாலையில் காரில் பறக்கிறார்களா? என்பதை பெற்றோர்கள் அறிந்து கொள்ள முடியும்.

கல்லூரியிலும் GPS வசதி உள்ள ஐடி கார்டு கொடுத்துவிட்டால், மாணவர்கள் எப்போது கல்லூரிக்குள் வந்தார்கள், எந்த வகுப்பில் இருந்தார்கள், பிசிக்ஸ் லேபில் இருந்தார்களா? காண்டீனில் மெதுவடை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்களா? உட்பட அனைத்தையும் கண்காணிக்கலாம்.

தற்போது BPO நிறுவனங்களில், பணியாளர்களை வீட்டில் இறக்கிவிடும் கார்களில் GPS பொறுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம், கார் பாதை மாறி சென்றாலோ, ஒரே இடத்தில் நின்றாலோ, எளிதில் தெரிந்துவிடும். எனவே குற்றங்கள் தடுக்கப்படும், பணியாளர்கள் தைரியமாக சென்று வரலாம்.

GPS - மக்கள் ஒழுங்காகப் பயன்படுத்துகிறார்களா?
இது கிட்டத்தட்ட கடவுள் விளையாட்டு, எந்த இடத்திற்குச் சென்றாலும், அதன் வரைபடம், அஙகிருக்கும் நபர்களின் விருப்பு, வெறுப்புகள், தற்போது அங்கிருப்பது யார் போன்ற விபரங்கள், எந்த மெனக்கெடலும் இன்றி, நமது ஸ்மார்ட் போன்களிலேயே கிடைக்கிறது. இத்தனை வலிமையான இந்த நுட்பத்தை மக்கள் தற்போது ஒரு வழிகாட்டி அல்லது உணவகங்கள்-தியேட்டர்களை கண்டுபிடிக்க உதவும் கைடு போல சிம்பிளாகத்தான் பயன்படுத்த துவஙகியிருக்கிறார்கள். இதன் மூலம் பெருமளவில் இலாபமடைந்திருப்பதும், இலாபம் அடையப் போவதும் வியாபார நிறுவனங்களே.

1 comment:

jo said...

E52 NOKIA வில் GPS வசதி உண்டா?அப்படி இருந்தால் இண்டர் நெட் வசதி இருந்தால் மட்டும் அதான் பயன் படுத்த முடுயுமா?இதை எப்படி பயன்படுத்துவது என்று சொல்ல முடியுமா?