Thursday, April 8, 2010

நீ - நொடிகளில் புதைந்திருக்கும் யுகம்


நீ
இன்னும் வரையப்படாத வானவில்லாக
இன்னும் இசைக்கப்படாத வீணையாக
இன்னும் எழுதப்படாத கவிதையாக
இன்னும் கடக்கமுடியாத தொலைவாக
எனது நொடிகளில் யுகங்களாக புதைந்திருக்கிறாய்!


நீ
விதைகளில் ஒளிந்திருக்கும் விழுது
துளியில் ஓய்வெடுக்கும் கடல்
அகலில் பதுங்கியிருக்கும் சூரியன்

நீ
என்னுடன் வரமுடியாது.
ஆனால் . . .
நான் உன்னுடன் வருவேன்
மழையைத் தொடரும்
மண் வாசனையைப் போல!