Tuesday, March 16, 2010

நினைவிடுக்கில் வழியும் நிலவொளி


அள்ளி எடுத்துப் போக முடியாத நிலவொளியாய்
என் மேல் எப்போதும் பொழிகிறாய் நீ!

ஒளிர்வதும் ஒளிவதும்
உன் இயல்பாக இருக்கிறது.

கதவுகள் இல்லாத வானத்தில்
நீ வந்து போகும் தடம் தெரியவில்லை.

ஆனால் நீ வரும்போதெல்லாம்,
எனக்கு நான் தெரிகிறேன்.

அது போதுமெனக்கு!

.................................................................................

12 comments:

Chitra said...

ஒளிர்வதும் ஒளிவதும்
உன் இயல்பாக இருக்கிறது.

.......... அமாவசை அன்று, முழு மதிமுகம் மிஸ் செய்து எழுதப்பட்ட கவிதையும் படமும் நன்று. :-)

நட்புடன் ஜமால் said...

நீ வரும்போதெல்லாம்
எனக்கு நான் தெரிகிறேன்

சிம்ப்ளி சூப்பர்ப் அண்ணே

Thenammai Lakshmanan said...

வளர்வும் தேய்வும் இல்லாமல் எப்போதும் உங்கள் மேல் பொழிகிறதா செல்வா

மதுரை சரவணன் said...

அருமை நண்பா!வாழ்த்துக்கள்

ஸ்ரீராம். said...

ஆனால் நீ வரும்போதெல்லாம்,
எனக்கு நான் தெரிகிறேன்//

அருமை

பனித்துளி சங்கர் said...

கலக்கல் நண்பரே !

அருமையான சிந்தனை !

பனித்துளி சங்கர் said...

"நினைவிடுக்கில் வழியும் நிலவொளி"


தலைப்பே ஒரு கவிதைதான்

பாலா said...

நல்லா இருக்கு செல்வா
"அவர் " ரிலீஸ் எப்போ?

விஜய் said...

தென்னங்கீற்றிடுக்கில் ஒளிரும் நிலவு போல் உங்கள் நினைவிடுக்கில் வழிந்த கவிதை அழகு

வாழ்த்துக்கள்

விஜய்

அன்புடன் மலிக்கா said...

நிலவொளியின் நிழலோடு எத்தனை நாள் நடைப்பயணம் துரத்தியபடி.

/நீ வரும்போதெல்லாம்
எனக்கு நான் தெரிகிறேன்//

ஒவ்வொரு வரியும் அருமை அருமை. வாழ்த்துக்கள்..

Muthuvel Sivaraman said...

நல்ல கவிதை selva



Check by below (poem/photo)blog.

http://ivaikavidhaialla.blogspot.com

Gowtham GA said...

என்னை தொலைத்து உன்னை அடைந்த நிமிடங்கள் மீண்டும் இருதயத்தில் மணி அடித்த அந்த செழிப்பான காட்சிகள் என் கண் விழி நீங்க மறுக்கிறதே...இப்படிக்கு கிறுக்கன்...

www.gowthampoems.tk