Sunday, May 10, 2009

ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் (ஜெயலலிதாவிற்குத் தந்த) விசிடி என ஒன்று இருக்கிறதா?

ஸ்ரீஸ்ரீ ரவிஷங்கரின் விசிடி குறித்து எனக்கு சில சந்தேகங்கள் உள்ளன.

அவர் எடுத்த காட்சிகள் இலங்கை அரசின் அனுமதி பெற்று எடுக்கப்பட்டதா? அல்லது எடுக்கப்பட்டதா?

அந்த வீடியோவை படமெடுத்தவர்கள் யார்? ஸ்ரீஸ்ரீரவிஷங்கரின் ஆட்களா? வெளியாட்களா?

ஸ்ரீஸ்ரீரவிஷங்கர் இது போல எத்தனை வீடியோக்களை எந்தெந்த நாடுகளில் எடுத்துள்ளார்?

வீடியோ எடுப்பதின் அவசியம் என்ன? விளம்பரமா? விவகாரமா?

அந்த வீடியோ இந்த உலகத்துக்கு தெரிய வேண்டிய, இலங்கை அரசின் அட்டுழியங்களை அம்பலப்படுத்துகின்ற வீடியோ என்றால் அதை ஏன் சர்வதேச மீடியாக்களுக்கு தரவில்லை? (உதாரணமாக பி.பி.சி, சி.என்.என்)

சரி சர்வதேச மீடியாக்களுக்கும் இதற்கும் தொடர்பில்லை என்று அவர் கருதியிருந்தால் இந்திய மீடியாக்களுக்கு ஏன் தரவில்லை? குறைந்த பட்சம் ஜெயா டிவிக்காவது கொடுத்திருந்தால் உலக மக்கள் அந்த அட்டுழியங்களை பார்த்திருக்க முடியும். ஜெயலலிதாவின் பிரச்சாரத்திற்கு மேலும் உதவியிருக்கும்.

மீடியாக்களை தவிர்ப்பதும் ஸ்ரீஸ்ரீரவிஷங்கர் அவர்களின் இஷ்டம். ஆனால் அதை ஏன் மற்ற தலைவர்களுக்கு காட்டவில்லை. என்னிடம் கொடுத்தால் இலவசமாகவே காப்பி எடுத்துத் தருவேன். ஒவ்வொரு தலைவருக்கும் ஒரு காப்பி கொடுக்கலாம். ஆனால் அதை ஜெயலலிதாவிடம் மட்டும் இரகசியமாகக் கொடுத்தது ஏன்?

ஸ்ரீஸ்ரீ ரவிஷங்கர் எடுத்த இரகசிய அல்லது இலங்கை அரசின் அனுமதி பெற்று எடுத்த அந்த வீடியோவை என்னைப் போன்ற சாதாரண பொதுமக்களும் பார்க்க ஆவலாக உள்ளோம். ஜெயலலிதா மட்டும்தான் அந்த விசிடியை பார்க்க வேண்டுமா? மக்கள் பார்க்கக் கூடாதா?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் தெரியாததால், எனக்கு ஒரு பெருத்த சந்தேகம் வருகிறது.

உண்மையிலேயே அப்படி ஒரு விசிடி இருக்கிறதா?

9 comments:

Anonymous said...

கருணாநிதி போன்ற வெட்டி ஆபிசரிடன் காட்டுதல் பயன் இல்லீங்கோ ...

சத்தியமூர்த்தி said...

சாமி எனக்கொரு சந்தேகமுங்க.

எங்கயாவது, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தான் அப்படி வீடியோ எடுத்ததாகவோ, அதை ஜெ.விடம் கொடுத்ததாகவோ சொல்லியிருக்கிறாரா? அப்படி தெரிந்தால், தயவு செய்து அதற்கான உரல் தாருங்கள்.

Agilan said...

ponga sir.. unkalukku romba kurumbu..
Azhagiri uyirukku communistala aabathu iruppadhu pola dhaan ravishankar JJku kudutha CD..

Anonymous said...

This question shows your real color, you just wanted to support the bloody DMK.

Your questions i would have accepted if youhave put in the first artcile itself. But on the same topic you have opened another artcile that means you have submitted your first article without thinking in detail or you just wanted to find fault.

Why the CD has to be shown the idiot Karunanidhi (Competitor of Karuna - to destro Tamil People.)

Do not try to politicise from your end. People like you only making these issues politicised. you in the sense Media/blogger, it is all helps to increase the distance between political parties/leaders. Please understand that.

Do you know the full story.
He would have requested Drama Actor Karunanidhi to see the CD, he would have thought if we meet a hindu idologitic person now then it would reduce the religion business man votes (christians) and Muslim votes. So he would have avoided it.

or JJ would have requested to RaviShankar to see the video. Otehrs would have not.

or he would have sent to Govt they did not show any interest in that, because these actors are expecting this result only.

May be the CD contents he does not want to publish because of the cruality

I do not know you have enabled the audit for comment and also not sure this comment would get displayed or not.

I am just reading thri tamilish.com nothign else.

That is the reason u do not see my actual name.

ISR Selvakumar said...

//ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தான் அப்படி வீடியோ எடுத்ததாகவோ, அதை ஜெ.விடம் கொடுத்ததாகவோ சொல்லியிருக்கிறாரா? //

ஜெ. அப்படிச் சொன்னதற்கு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மறுப்பேதும் சொல்லியிருக்கிறாரா?

ISR Selvakumar said...

//கருணாநிதி போன்ற வெட்டி ஆபிசரிடன் காட்டுதல் பயன் இல்லீங்கோ ...//

இந்த உலகத்தில் ஜெவைத் தவிர மீதி எல்லோருமே வெட்டி ஆபீசர்கள் என்று ஸ்ரீஸ்ரீ நினைப்பது ஏன்?

அமெரிக்காவிடம் முறையிடுகிறோம். நார்வேயை தூதுக்கு அழைக்கிறோம். ஐரோப்பிய யுனியனை துணைக்கு வரச்சொல்கிறோம். இந்த நாடுகளுக்கு கருணாநிதி என்கிற வெட்டி ஆபீசர் தலைவர் இல்லை. அந்தந்த நாடுகளுக்கென்று தனித்தனி தலைவர்கள் இருக்கின்றார்கள். இவர்களும் வெட்டி ஆபீசர்களா? இந்த நாட்டுத் தலைவர்களிடமாவது ஏன் காட்டவில்லை என்பது தான் கேள்வி.

ISR Selvakumar said...

ராஜபக்ஷே ஒரு அரக்கனைப் போல இரக்கமே இல்லாமல் ஈழத்தமிழர்களை கொன்று குவித்துக்கொண்டிருப்பதை உலகமே அறியும். ஆனால் அதற்க்கான ஆதாரங்களை வெளிச்சம் போட்டுக் காட்ட முடியாமல் பி.பி.சி, சி.என்.என் போன்ற செய்தி நிறுவனங்களே தடுமாறும்போது ஸ்ரீஸ்ரீ அவர்கள் ஒரு வீடியோவை எடுத்துவிட்டதாக ஜெ. சொல்கிறார். அதைத் தான் பார்த்து மனம் மாறிவிட்டதாகச் சொல்கிறார். உண்மையிலேயே அப்படி ஒரு சிடி இருக்குமானால் ராஜபக்ஷேவை சர்வதேசக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த அதுவே மிகப் பெரிய ஆதாரம்.

ஆனால் அந்த உலகிற்கு காட்டுவதில் என்ன தயக்கம்?

//This question shows your real color, you just wanted to support the bloody DMK.//

கருணாநிதி மேல் இருக்கும் கோபத்தில், ஜெயலலிதாவின் திடீர் மனமாற்றத்தை கேள்வி கேட்பவர்களை எல்லாம், ஜஸ்ட் கருணாநிதி ஆதரவாளர்கள் என்று ஒதுக்குகிறீர்கள்.

அதுமட்டுமல்லாமல் ஈழத்தமிழர்களை மறந்துவிட்டு எந்தக் கேள்வியும் கேட்காமல் ஜெயலலிதாவிற்கு ஓட்டு கேட்கும் உணர்ச்சிமிகு எந்திரங்களாக நீங்கள் மாறிப்போய்விட்டீர்கள்.

உங்கள் மாற்றம் உண்மையிலேயே தனிஈழத்தை பெற்றுத்தருமானால் எனக்கும் மிக்க மகிழ்ச்சியே.
ஆனால் . . . தேர்தலுக்குப் பின் ஜெ உங்களை கை கழுவினால் . . . அந்தோ பரிதாபம்!

Unknown said...

செல்வா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை, இப்பொழுது அனைவரும் ஈழ மக்களை விட்டு விட்டு கருணாநிதியா ஜெயலலிதாவா என்று மாறி விட்டனர் பாவம் ஈழ மக்கள்

Prabhu said...

அப்படி என்னதான் அந்த வீடியோவில இருக்கு?