Friday, October 31, 2008

Times of India-யாவா? Crimes of India-யாவா?

சென்னையில் டிஸ்கோதெ கிளப்புகள் எங்கே இருக்கின்றன. அவற்றில் குடித்துவிட்டு இரவு முழுக்க கூத்தடிப்பவர்கள் யார் யார்? அவர்களைப்போல நாமும் எப்படி கூத்தடிப்பது, என்பது பலகாலம் சென்னை வாழ், தமிழ் மக்களுக்கு தெரியாமல் இருந்தது. ஆனால் டெக்கான் கிரானிக்கிள் மற்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆகிய இரு செய்தித்தாள்களும் வந்தவுடன், அந்த இராத்திரி இரகசியங்களுக்கு ஒரு ஸ்டேட்டஸ் கிடைத்துவிட்டது. தினமும் அர்த்த இராத்திரி வரை ஆடும் அர்த்தமற்ற கும்மாளங்களுக்கு தினமும் ஒரு பக்க கவரேஜ். வாழ்க டெக்கான் கிரானிக்கிள் மற்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியா!

சில மாதங்களுக்கு முன்பு ஈ.சி.ஆர் ரோடில் உள்ள ரெசாட்டுகளில் போலீஸ் திடீர் ரெய்டு நடத்தினார்கள். அரை குறை ஆடைகளுடன் இளைஞர்களும், இளைஞிகளும் கும்பல் கும்பலாக மாட்டினார்கள். ஒரு ரெய்டில் சில பெண்கள் குடித்துவிட்டு ஆடையே இல்லாமல் ஒளிந்து விளையாடிக் கொண்டிருந்தார்களாம். இந்தக் கண்றாவிக்கெல்லாம் செக் வைத்தவுடன், டெக்கான் கிரானிகள் சிலிர்த்துக் கொண்டது. போலீஸ் ஏன் அத்து மீறி ரெசாட்டுகளுக்குச் செல்கிறது? என்று கேள்வி எழுப்பியது. சில டெக்கிகள் (முழுக்கப் படித்துவிட்டு அரை குறை உடைகளுடன் கூத்தடிப்பவர்களை இந்த ஆங்கிலப் பத்திரிகைகள் இப்படித்தான் செல்லமாக அழைக்கின்றன), போலீசின் இந்த நடவடிக்கையை கண்டிப்பதாக பேட்டி கொடுத்ததும், அதை டெக்கான் வெளியிட்டதும் கேலிக் கூத்தின் உச்சகட்டம்.

அதே போல இரவு 11 மணிக்கு மேல் குடித்துவிட்டு ஆடக் கூடாது, அப்படி ஆடினால் அந்த கிளப்புகளுக்கு தடை என்று சில மாதங்களுக்கு முன்பு அரசாங்கம் உத்தரவு போட்டது. அவ்வளவுதான் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு பொறுக்கவில்லை. தினமும் அரை மயக்கத்தில் வீடு திரும்பும் உயர் மட்ட(மான) குடி மகன்கள் பலரை பேட்டி கண்டு, 'தனி மனித உரிமையில் தலையிட நீ யார்?', 'எங்கள் சுதந்திரத்தை ஏன் பறிக்கிறாய்?' என்று செய்தி வெளியிட்டது. எது உரிமை? எது சுதந்திரம்? டைம்ஸ் ஆஃப் இந்தியா பதில் சொல்லட்டும்.

அக்டோபர் 25ம் தேதி, இலங்கைத் தமிழர்களின் படுகொலையை கண்டித்து, சென்னையில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. அதற்கு டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியின் ஒரே ஒரு பகுதியை கீழே கொடுத்திருக்கிறேன்.

Most of the students, drenched in the rain and shivering, stood for hours for a cause they had no clue about.

மழையில் நனைந்து நடுங்கிக் கொண்டே நின்று கொண்டிருந்த மாணவர்களுக்கு ஏன் நிற்கிறோம் என்றே தெரியவில்லையாம்.

எதுவும் தெரியாமல் நின்றார்கள் என்றே வைத்துக் கொள்வோம். அப்படியே நின்றிருந்தாலும் அதில் என்ன தவறு. டிஸ்கோதெ கிளப்புகளிலும், ஈ.சி.ஆர் ரெசார்ட் மறைவுகளிலும் அரை குறை ஆடைகளுடன் திரிவதைக் காட்டிலும் இது மேலானதே. அந்த மாணவர்களுக்கு இலங்கைப் பிரச்சனையின் தீவிரம் தெரியாமல் போனதற்கென்ன காரணம்?

சிவாஜி','தசாவதாரம்' போன்ற படங்கள் ரிலீசின் போது மணிக்கணக்கில் நின்று டிக்கெட் வாங்கியவர்களை ஒரு சாதனையாளர்களைப் போல வருணித்தது யார்? டிஸ்கோ இரவுகளில் சிரிப்பவர்களை கலர் போட்டோக்களாக வெளியிட்டு கெளரவப் படுத்துவது யார்? இலங்கைப் பிரச்சனை பற்றி மூடி மறைப்பது யார்? டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற ஊடகங்கள்தான். இந்த பொறுப்பற்ற ஊடகங்களால்தான் இளைஞர்கள் சமூகத்தைப் பற்றி எந்தச் சுரணையுமின்றி வளர்கிறார்கள்.

எனவே டைம்ஸ் ஆஃப் இந்தியா எதுவும் தெரியாமல் நின்ற அந்த மாணவர்களுக்காக ஒரே ஒரு நாள் டிஸ்கோதெ பக்கங்களை நிறுத்தட்டும். நிறுத்திவிட்டு இலங்கைப் பிரச்சனை என்றால் என்ன என்று, ஒரு ஸ்பெஷல் எடிஷன் போடட்டும். தமிழக இளைஞர்களுக்கு எது சுதந்திரம்? எது உரிமை என்று புரிய இது உங்களால் ஆன சிறு முயற்சியாக இது இருக்கட்டும்.

அப்படிச் செய்தால்தான் நீங்கள் Times of India, இல்லையென்றால் நீங்கள் Crimes of India.

19 comments:

Anonymous said...

concern person editior should take care about this.
i think this is run from birla group

Anonymous said...

concern person(editor) should take care.
i thing this is Run by Birla group

தமிழ் நாடன் said...

தமிழன பத்தி எழுதினா யார் காசு கொடுப்பா?யார் ஒசியில சரக்கு குடுப்பா? இவங்களை பத்தி எழுதனா ஆர்ட்டிகிள் தயார் பண்றேன்னு சொல்லி ஒசியிலே எல்லாத்தயும் அனுபவிக்கலாம். இதவிட இன்னும் மோசம் தினமலர், ஹிண்டு போன்ற ஆதிக்க வெறி கும்பல். தமிழனுக்கு எதிரா அதுவும் ஈழ தமிழர்களுக்கு எதிரா எழுதரதுல இந்த கும்பலுக்கு அவ்வளவு சந்தோழம். சாப்பிட்ட இலையிலேயே அசிங்கத்தையும் பன்றவங்க இவங்க!

Anonymous said...

romba sariya sonninga.marangal amaithiyai virumbinalum katru viduvathillainu oru pazhamozhi undu. atha follow pannithan DC, TIM newspaper print aguthunu ninaikiren.nalvazhiyila payanikka ninaikra makkala kooda ithu mathiri seithithalkal thisai thirupiduthu. itharku pathil avanga neradiya PORN BOOKS veliyidalam.

harijana said...

Thamil naadan avarhalea

Eazha Thamilarkalukku support pannalam, Viduthalai pulihalukku alla.

Neengal sollum Dinamalar, Hindu athaithan solhirathu.

Ungalal Pesamudiyavillai endral irukkavo irukkirathu

ATHIKKA SAKTHI, PARPPANIYAM, PARPPANARKAL.

Ennaiya pithattrukireer

Anonymous said...

Thamil naadan avarhalea

Eazha Thamilarkalukku support pannalam, Viduthalai pulihalukku alla.

Neengal sollum Dinamalar, Hindu athaithan solhirathu.

Ungalal Pesamudiyavillai endral irukkavo irukkirathu

ATHIKKA SAKTHI, PARPPANIYAM, PARPPANARKAL.

Ennaiya pithattrukireer

Anonymous said...

Thamil naadan avarhalea

Eazha Thamilarkalukku support pannalam, Viduthalai pulihalukku alla.

Neengal sollum Dinamalar, Hindu athaithan solhirathu.

Ungalal Pesamudiyavillai endral irukkavo irukkirathu

ATHIKKA SAKTHI, PARPPANIYAM, PARPPANARKAL.

Ennaiya pithattrukireer

ISR Selvakumar said...

தமிழ்நாடன்,
லஞ்சம் குடுக்கறவங்க இருக்கற வரைக்கும் லஞ்சத்தை எப்படி ஒழிக்க முடியாதோ அதைப்போல,நீங்க சொல்ற 'கவர் மற்றும் சரக்கு' சார்ந்த ஜர்னலிஸம் மாறவே மாறாது.

எந்தப் பத்திரிகையாக இருந்தாலும், ஒரு stand அல்லது ஒரு சார்பு நிலை இருப்பது பெரிய தவறல்ல. ஆனால் முழுக்க முழுக்க முரசொலி, நமது எம்.ஜி.ஆர் போல இருந்துவிட வேண்டும். ஆனால் நடுநிலை என்று கூறிக்கொண்டு ஒரே சைடாக பேசுவதும் எழுதுவதும் தற்போது 'பத்திரிகை அரசியலாகி' விட்டது.

Pugal said...

ida TOI padikka vaaippu irukka...

ISR Selvakumar said...

வாங்க புகழ்,
டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கும் ஒரு லிங்க் அனுப்பியிருக்கேன்.

விரைவில் உங்கள் வலைப்பூக்களை எதிர்பார்க்கிறேன்.

ISR Selvakumar said...

பாலா,
நீளம் கருதி, ஒரு விஷயத்தை நான் இந்தப் பதிவுல எழுதல. விஜயகாந்த் இளைஞர் மாநாடு சென்னையில நடந்த போது பயங்கர கூட்டம். முக்கிய சாலைகளில் கன்னா பின்னா நெரிசல். அந்த நெரிசலைப் பற்றி டைம்ஸ் ஆஃப் இந்தியா எழுதவில்லை. ஆனால் மனிதச் சங்கிலியன்று 'நெரிசல்' என்பதுதான் தலைப்பே.

ISR Selvakumar said...

ஹரிஜனா (இதுதான் உங்க பேரா?)
இயக்குனர்கள் சீமான் மற்றும் அமீரின் கைதுகள், ஈழத் தமிழர் ஆதரவு என்பதும், புலிகள் ஆதரவு என்பதும் வேறு வேறு என்று பலருக்கு புரிய வைத்துவிட்டன.

இனி ஜாக்கிரதையாக பேசுவார்கள். நாளைக்கு நடக்கப் போகிற நடிகர்கள் உண்ணாவிரத்தில் 'பேச்சு' 'பேச்சாக இருக்கும்' என்றே நினைக்கிறேன்.

நிலவுக்காதலன் said...

very very nice and valuable points..MUST READ.thanks for creating such awareness.. jai hind..

Rgds
RSA

Indian said...

Welcome to the world of TOI. TOI is introducing "its" culture to Chennai. Tremors are natural.

ஆட்காட்டி said...

சிந்திக்கலாம்

ராஜரத்தினம் said...

நல்ல‌ ப‌திவு. பொதுவாக‌ நான் க‌ருணாநிதி ஆத‌ர‌வு எழுத்தாள‌ர்க‌ளை, அவ‌ர்க‌ள் எதை எழுதினாலும் எதிர்ப்ப‌வ‌ன் நான். இருந்தாலும் உங்க‌ள் ப‌திவு நல்ல‌ ப‌திவு.

ராஜரத்தினம் said...

நான் இப்பொழுது இந்தியாவில் இல்லை. இருந்தாலும் அவ‌ர்க‌ள் ம‌னித‌ ச‌ங்கிலியை ப‌ற்றி அவ‌ர்க‌ள் எழுதிய‌தை ஏற்றுக்கொள்கிறேன். ப‌ள்ளி மாண‌வ‌ர்க‌ளை இழுத்துக்கொண்டு வ‌ந்து சாலையில் நிற்க‌ வைத்த‌ ஒன்றிற்கே அதை எவ்வுள‌வு ப‌ழித்தாலும் த‌கும்.

மங்களூர் சிவா said...

வெட்கக்கேடு :(

கிரி said...

நீங்கள் கூறியது போல இந்த இரு பத்திரிக்கைகள் னால் தான் எனக்கு இதை போல பார்ட்டி கள் நடப்பதே தெரியும்.

இந்த இரு பத்திரிகைகளும் இளைஞர்களை குறிவைத்து தங்கள் பத்திரிகைகளை நடத்துகின்றன.