Thursday, October 23, 2008

மனிதச் சங்கிலி தொடர்பாக அறிவுச் சங்கிலி ஞாநிக்கு சில கேள்விகள்

நடக்கவிருக்கும் மனித சங்கிலியைக் குறித்து, 1987ல் நடந்தது, 'போராட்டம்', இப்போது நடப்பது வெறும் 'அணிவகுப்பு'. அன்றைய கோரிக்கை 'இந்திய அரசே தலையிடாதே', இன்றைய கோரிக்கை 'இந்திய அரசே தலையிடு', என்று உலக மகா ஞாநி வழக்கம் போல பிதற்றலை ஆரம்பித்திருக்கிறார்.

முதலில் அவருடைய வார்த்தை ஜாலத்திற்கு வருகிறேன்.

சிறுவயதில் வெளியே செல்லும்போது எனது தந்தை என் கையை பிடித்துக்கொண்டு, 'டேய் என் கையை விட்டுட்டு எங்கயும் போயிடாத' என்பார், சில நேரம் 'டேய் என் கையை விடாம கூடவே வா' என்பார். இரண்டுக்கும் ஒரே அர்த்தம்தான். சின்னக் குழந்தைக்கு கூட இது தெரியும். ஆனால் ஞாநி இரண்டுக்கும் வெவ்வெறு அர்த்தங்கள் என்கிறார்.

'இந்திய அரசே இலங்கை தமிழர்களுக்கு எதிராக தலையிடாதே'
'இந்திய அரசே இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தலையிடு'

இந்த இரண்டு கோஷங்களுக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா? ஆனால் இருக்கிறது என்கிறார் ஞாநி. அதற்கு வசதியாக இலங்கை தமிழர்களுக்கு எதிராக, இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக ஆகிய இரு சொற்றொடர்களையும் நீக்கிவிட்டார். நீக்கி விட்டு படித்தால் என்ன வருகிறது பாருங்கள். 'இந்திய அரசே தலையிடாதே', 'இந்திய அரசே தலையிடு' என்று வருகிறது. அதாவது இலங்கைத் தமிழர்கள் விஷயத்தில் அதன் ஆதரவாளர்கள் நிலையை மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள் என்று போலி குற்றம் சாட்டுகிறார்.

1987ல் நடந்தது, 'போராட்டம்', இப்போது நடப்பது வெறும் 'அணிவகுப்பு' அதற்குச் செல்லாதீர்கள் என்று சொல்லாமல் சொல்கிறார். ஞாநி சொல்வது போல நடக்கவிருக்கும் மனிதச் சங்கிலி தி.மு.க தலைமையில் நடைபெறும் வெறும் அணிவகுப்புதான் என்று வைத்துக்கொண்டாலும், அப்படி 'வெறும் அணிவகுப்பாக' தோற்றமளிக்க யார் காரணம்?

யார் காரணம் என்று சுட்டுவிரலை நீட்ட மாட்டார். ஏனென்றால் அவருடைய விரல் அவருக்குப் பிடித்த ஜெயலலிதாவை நோக்கி நீள வேண்டும். அன்றும், இன்றும், என்றும் இலங்கைத் தமிழர்கள் விஷயத்தில் எதிர் பக்கத்திலேயே ஜெயலலிதா நிற்கிறார், நிற்பார். அம்மாவைத் திட்ட மனமின்றி, புது அரசியல்வாதி விஜயகாந்த்தை திட்டவும் மனமின்றி மீண்டும் கருணாநிதியின் மேலேயே பாய்கிறார். ஜெவும், விஜயகாந்தும் மனித சங்கிலிக்கு வரவேண்டாம், ஆனால் குறைந்தபட்சம் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு தங்கள் கைத்தடிகளையாவது அனுப்பி வைத்திருக்கலாம். ஆனால் அவர்கள் அப்படிச் செய்யவில்லை. ஏன் என்று கேட்டு குட்டவும் ஞாநிக்கு மனமில்லை.

குமுதம் தலையங்கத்திலும் இதே வழவழாதான். 'இலங்கை அரசுக்கு இதுவரை பல உதவிகளைச் செய்திருக்கிற மத்திய அரசு, இனியாவது அதை அடியோடு நிறுத்தி அங்குள்ள தமிழர்களின் எதிர்காலம் குறித்து உரிய நடவடிக்கை எடுத்தாக வேண்டும்' என்று சில வரிகள் உள்ளன. "உரிய நடவடிக்கை" என்றால் என்ன? அதற்கு குமுதம் பதில் சொல்லுமா? இல்லை ஞாநி தனியே பதில் சொல்வாரா?

ஞாநி அதற்கும் முயற்சித்திருக்கிறார். 'போரை விட்டு விட்டு ஜனநாயகத்திற்கு வாருங்கள்' என்று பிரபாகரனுக்கு கோரிக்கை வைக்கிறார். சபாஷ்! சரியான குள்ள நரி சிந்தனை! 'இந்தியாவை தலையிடு' என்று சொன்னால் அது 'போர் நிறுத்ததிற்கு வலியுறுத்துவதற்காகத்தான்' இருக்க முடியும். அப்படிச் செய்தால் அது சூழ்நிலை காரணமாக புலிகள் ஆதரவாகத்தான்' இருக்க முடியும். ஆனால் அப்படி வெளிப்படையாக சொல்ல முடியாது என்பதால் பிரபாகரனை போரை நிறுத்திவிட்டு வந்து 'மகாபலிபுரத்தில் நடனம்' பார்க்கச் சொல்கிறார். ரஜினி கர்நாடக மக்களிடம் மன்னிப்பு கேட்டதற்கே தமிழினத் துரோகி என்று கடிதம் எழுதிய ஞாநி, பிரபாகரனை சிங்கள அடக்குமுறைக்கு எதிராக போரை நிறுத்திவிட்டு வாருங்கள் என்று கூசாமல் சொல்கிறார். இந்தியாவை போர் நிறுத்தத்திற்கு வலியுறுத்த திராணியின்றி, ஜெயலலிதா வகையறாக்களுடன் சேர்ந்துகொண்டு, பிரபாகரனை நிறுத்தச் சொல் என்கிறார். யார் துரோகி?

பிரபாகரனின் இராணுவ நடவடிக்கைகளை விட ஜெயலலிதா, கருணாநிதியின் ஊழல் அரசாங்கள் மக்களுக்கு அதிகம் பலனளித்திருக்கிறதாம். மிஸ்டர் ஞாநி, அடிப்படையை மறந்துவிட்டார். தமிழ்நாடு என்பது சுதந்திர பூமி. இங்கு வடிவேலு முதலமைச்சரானால் கூட, மக்கள் எப்படியோ வாழ்ந்து கொள்வார்கள். ஆனால் ஈழம் என்பது, சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழும் கொடுமை. தற்போது நடந்துகொண்டிருப்பது அந்தக் கொடுமைக்கெதிரான கடைசி யுத்தம். யுத்தத்தை நிறுத்த இந்தியாவால் முடியும். ஆனால் பிரபாகரனால் முடியாது. பாலியல் கொடுமை வழக்கில் ஜெயிலுக்குப் போன நடிகனுக்கு கூட இந்த வரலாற்று உண்மை தெரியும். ஞாநியும் இதெல்லாம் தெரியாத முட்டாள் அல்ல.

அவரே கூறியிருப்பது போல மெய்யான மனிதச் சங்கிலி என்பது கைகளை இணைப்பது அல்ல, மனங்களை இணைப்பதுதான் என்றால், முதற்கட்டமாக அவர் தமிழகத்தின் அரசியல் போக்கை தீர்மானிக்கும் அளவுக்கு வாக்கு வைத்திருக்கும் ஜெ, மற்றும் விஜயகாந்தின் மனதை மாற்ற முயற்சிக்க வேண்டும். அவர்களையும் இணைந்து குரல் கொடுக்கச் சொல்ல வேண்டும். செய்வாரா?

செய்யமாட்டார் என்பதால் ஞாநிக்கு 2011 குட்டுகள் பரிசளிக்க முடிவு செய்திருக்கிறேன். ஞாநி தன்னைத்தானே குட்டிக் கொள்ள முடியாது என்பதால், இதைப் படிக்கும் நண்பர்கள் அனைவரும் அன்பாக ஞாநியின் தலையில் ஒரே ஒரு குட்டு குட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன். முதல் குட்டு என்னுடையது 'டங்'. நிறைய குட்ட வேண்டும் போலிருந்தால் ஜெயலலிதா மற்றும் விஜயகாந்தின் தலையில் குட்டுமாறு வேண்டுகிறேன். மேக்கப் போடுவதற்க்காக ஜெயலலிதா மற்றும் விஜயகாந்திற்கு கண்ணாடி பார்க்கும் பழக்கம் உண்டு. எனவே ஒவ்வொரு முறை கண்ணாடியை பார்க்கும்போதும், தலையை தடவும்போதும், உண்மையான தமிழ் மக்கள் குட்டிய இடம் வலிக்கும் உணர்ச்சி ஏற்படும். வலி கோபமாகி 'என்ன ஞாநி இது? எல்லாம் உன்னாலதான?' என்று அவர்கள் எகிறும் நிலை வரும்.

45 comments:

Anonymous said...

good nanba

Anonymous said...

குழப்பம் ஞானிக்கு அல்ல. உங்களுக்குத்தான். விசு போன்று வசனங்களைக் குழப்பாமல் தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்.

ஒரு ஈழத் தமிழன்

Anonymous said...

நடு மன்டைல நட்சுன்னு ஒரு கொட்டு

Anonymous said...

குட்டிய வேகத்தில் குமுதம், தினமலரை சீண்டமாட்டேன்,என் உழைப்பை அவர்கள் சுரண்ட அனுமதியேன் என உறுதி எடுக்கவும்

ISR Selvakumar said...

//குழப்பம் ஞானிக்கு அல்ல. உங்களுக்குத்தான். விசு போன்று வசனங்களைக் குழப்பாமல் தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்.

ஒரு ஈழத் தமிழன்//

ஈழத் தமிழர்கள் பெயர் சொல்லாமல் அனானியாக ஒளிகிறவர்கள் அல்ல என்பது என் கருத்து.

Unknown said...

கணார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..

karu said...

good writing seva who is gnani sorry,

karu said...

good writting selva

RAVI said...

Very good say...

Jnani-kku mattumala, JJ, Cho, Hindu Ram ellurukku ஒரு கொட்டு

RAVI said...

Very good say...

Jnani-kku mattumala, JJ, Cho, Hindu Ram ellurukku ஒரு கொட்டு

ராஜரத்தினம் said...

Hello, You first understand this LTTE Killed Our PM. SO we can not support LTTE. But Without LTTE Ealam Tamil suffer. I agree. This is very unfortunate. If you support this issue then LTTE will take as their support. I am saying If you Support a banned orgaization for whatever cause then by citing this example other banned organization also will act freely. Will you accept. If really Karuna have feeling about tamil, then he should fight for lifting Ban of LTTE. Then You will see the change. With out that nothing will happen.

ISR Selvakumar said...

தமிழன்,
குமுதம், தினமலரை சீண்டமாட்டேன் என்பதை விட, பதிலுக்கு பதில் சீண்டுவேன் என்ற நிலை எடுக்கவும்.

ISR Selvakumar said...

Mr. Karunanithi,

//good writing seva who is gnani sorry,//

You are seriously asking or joking?

ISR Selvakumar said...

Raja,

//Will you accept. If really Karuna have feeling about tamil, then he should fight for lifting Ban of LTTE. Then You will see the change. With out that nothing will happen.//

You can also request the same to J.J and others. Why you expect only Karunanithi do do this?

//Hello, You first understand this LTTE Killed Our PM. SO we can not support LTTE. But Without LTTE Ealam Tamil suffer. I agree. This is very unfortunate. If you support this issue then LTTE will take as their support.//

If you listen to Director Seeman's Rameswaram speech, you have enough answers for all you ask.

ISR Selvakumar said...

Ravi,

//
Jnani-kku mattumala, JJ, Cho, Hindu Ram ellurukku ஒரு கொட்டு
//
பின்னூட்டத்துல இவங்க எல்லாருக்கும் குட்டு விழும்னு எதிர்பார்த்தேன். என்னுடைய எதிர்பார்ப்பை நீங்க பொய்யாக்கல.

Dr.Rudhran said...

தமிழ்நாடு என்பது சுதந்திர பூமி. இங்கு வடிவேலு முதலமைச்சரானால் கூட, மக்கள் எப்படியோ வாழ்ந்து கொள்வார்கள். ஆனால் ஈழம் என்பது, சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழும் கொடுமை.
at last someone is able to point out how intellect is functioning...perhaps even why!

தமிழன் said...

அந்த லூச பற்றி எழுதி பெரிய ஆளாக ஆக்கவேண்டாம் நண்பரே.

ISR Selvakumar said...

டாக்டர் ருத்ரன் அவர்களுக்கு,
வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி!

அருண்மொழிவர்மன் said...

ஞாநியின் உளறல்களாஇ பற்றி ஒரு முறை அய்யா சுப. வீர பாண்டியன் எழுதிய கடிதத்தில் சரியாக உணர்த்தியிருப்பார்

ISR Selvakumar said...

பின்னூட்டமிடும் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்.
தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்கவும். அவ்வாறு இல்லாத பின்னூட்டங்களை நான் இங்கே அனுமதிப்பதில்லை.

ராஜரத்தினம் said...

அன்புள்ள‌ செல்வா,
நான் அவ‌ர்க‌ள் பேசிய‌தை கேட்க‌வில்லை. தேவையும் இல்லை. ராஜிவ்காந்தி கொலையை செய்த‌போதே அவ‌ர்க‌ள் இதை யோசித்திருக்க‌வேண்டும். த‌மிழின‌த்தை ஆத‌ரிப்ப‌வ‌ன் த‌மிழ‌னாக‌வும் இருக்க‌லாம் ஆனால் விடுத‌லை புலிக‌ளை ஆத‌ரிப்ப‌வ‌ர்க‌ள் அவ‌ர்க‌ள் செய்த‌ கொலையையும் ஆத‌ரிப்ப‌வ‌ர்க‌ளாக‌வே க‌ருத‌ப்ப‌டுவ‌ர்.காந்தியை கொன்ற‌து, இந்திர‌காந்தியை கொன்ற‌து எல்லாம் த‌னி ம‌னித‌ செய‌ல்க‌ள். அத‌னால்தான் அந்த‌ இன‌ம், ஆர்.எஸ்.எஸ் அகிய‌வை ம‌ன்னிக்க‌ப்ப‌ட்ட‌ன‌. இத‌ன் த‌லைவ‌ரே இது ஒரு துன்பிய‌ல் என்று வ‌ர்ணித்தார்.எப்ப‌டியும் இதை ஏற்க‌ முடியாது.

ISR Selvakumar said...

அன்புள்ள ராஜா,
நீங்கள் சொல்வது மிகச் சரி. இந்தியக் கோணத்தில், இன்று ஈழத் தமிழர் பிரச்சனையில் இதுதான் மிகப் பெரிய தடை.

ஆனாலும் இந்த விஷயத்தில் தண்டிக்கப்படக் கூடியது 'துன்பியல்' என வருணித்த பிரபாகரனே தவிர, அங்கே அவதிப்படும் ஈழத்தமிழர்கள் அல்ல.

இந்தியா முயன்றால் ஈழத்தமிழர்களுக்கு விடுதலையும், துன்பியலுக்கு தண்டனையும் தரமுடியும்.

ராஜரத்தினம் said...

நீங்க‌ள் ஒன்றை ம‌ற‌ந்து விட‌வேண்டாம்.இந்தியா இதில் த‌லையிட்டால் அது காஷ்மிர், இஸ்ரேல் ம‌ற்றும் உல‌க‌ பிர‌ச்னை ஆகிவிடும். அப்புற‌ம் பாகிஸ்தானை நீங்க‌ள் எதுவும் கேட்க‌ முடியாது. இத‌ற்கு ஒரே தீர்வு, விடுத‌லை புலிக‌ள் த‌ங்க‌ள் செய‌லுக்கு வ‌ருத்த‌ம் தெரிவித்து இந்தியாவிட‌ம் அர‌சிய‌ல் ரீதியாக‌ ச‌ர‌ண‌டைவ‌து,பின்பு விடுத‌லை புலிக‌ள் த‌ங்க‌ள் இய‌க்க‌த்தை வேறு பெய‌ரில் அல்ல‌து வேறு த‌லைவ‌ரை கொண்டு த‌டை செய்ய‌ப‌டாத‌ இய‌க்க‌மாக‌ மாற‌ வேண்டும். வேறு வ‌ழியில்லை.

Unknown said...

டங்....
டங்....
டங்....
டங்....
டங்....
டங்....
டங்....
டங்....

ராஜரத்தினம் said...

செல்வா அவ‌ர்க‌ளுக்கு,
நான் இப்பொழுது உங்க‌ள் விஷ‌ய‌த்திற்கு வ‌ருகிறேன். உங்க‌ளுக்கு ஞாநி மேல் என்ன‌ கோப‌ம்? அவ‌ர் சொல்லும் வார்த்தையில் என்ன‌ த‌வ‌று? க‌ருணாநிதிக்கு த‌மிழின‌த்தின் மீது அக்க‌ரை வ‌ரும்போதெல்லாம் அவ‌ருடைய‌ அர‌சிய‌ல் சூழ்நிலையை பார்த்தீர்க‌ள் என்றால் அக்க‌ரை மீது ஏன் அக்க‌ரை வ‌ந்த‌து என்று தெரியும்.

ISR Selvakumar said...

அன்புள்ள ராஜா,
//இத‌ற்கு ஒரே தீர்வு, விடுத‌லை புலிக‌ள் த‌ங்க‌ள் செய‌லுக்கு வ‌ருத்த‌ம் தெரிவித்து இந்தியாவிட‌ம் அர‌சிய‌ல் ரீதியாக‌ ச‌ர‌ண‌டைவ‌து,//

அரசியல் ரீதியாக இந்தியாவிடம் புலிகள் சரணடையலாம், ஆனால் எந்த வாக்குறுதியின் அடிப்படையில்?

//பின்பு விடுத‌லை புலிக‌ள் த‌ங்க‌ள் இய‌க்க‌த்தை வேறு பெய‌ரில் அல்ல‌து வேறு த‌லைவ‌ரை கொண்டு த‌டை செய்ய‌ப‌டாத‌ இய‌க்க‌மாக‌ மாற‌ வேண்டும். வேறு வ‌ழியில்லை.//

நடக்கவே முடியாத விஷயம்.

ராஜரத்தினம் said...

ராஜிவ் காந்தியை கொன்ற‌ போதே அவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் போராட்ட‌த்திற்கு இந்தியா,ம‌ற்றும் த‌மிழ்நாடு வ‌ழ‌ங்கி வந்த‌ ஆத‌ர‌வு த‌ள‌ங்க‌ளையும் கொன்று விட்டார்க‌ள். என்னை பொறுத்த‌வ‌ரை இன்னும் 50 ஆண்டுக‌ளுக்கு அவ‌ர்க‌ளால் இந்திய‌, த‌மிழ் ஆத‌ர‌வு நிலையை நினைத்து பார்க்க‌முடியாது.

Anonymous said...

நண்பர் ராஜாவுக்கு..,

ஒரு ஈழத் தமிழன் என்கிற ரீதியில் சில விளக்கங்கள் கொடுக்க கடமைப்பட்டுள்ளேன். இந்த ஆயுதப் போராட்டம் தோன்றிய காலத்தில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்திருக்கிறேன். தமிழ் இளைஞர்களுக்குள் கொழுந்துவிட்டு எரிந்த சுதந்திர தாகத்தைப் பயன்படுத்தி சாரி சாரியாக இயக்கங்களை உருவாக்கி கொத்துக்கொத்தாக இளைஞர்களை இந்தியாவில் வைத்து ஆயுதப்பயிற்சியும் வழங்கியது இதே இந்தியாதான். ஈழத்தமிழர் மீது இருந்த பற்றினால் இது என்று நீங்கள் எண்ணினால் ஏமாறப்போவது நீங்களே. இதை அவர்கள் செய்யக் காரணம் இலங்கை அரசு சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா என இந்திய எதிர்ப்பு நாடுகளுடன் நட்புப் பாராட்டியதுதான். இலங்கையில் அமைதியைக் குலைப்பதுவே அப்போது இந்தியாவின் நோக்கம். ஏனென்றால், இந்திய- சீனப் போருக்கு இலங்கை அரசின் ஆதரவு சீனாவின் பக்கமே இருந்தது. இந்தியா பாகிஸ்தான் போரில் பாகிஸ்தான் விமானப்படை இலங்கையில் எரிபொருள் நிரப்பிக்கொள்ள அனுமதிக்கப்பட்டது. அக்காலகட்டத்தில் இலங்கையை ஒரு கட்டுக்குள் வைத்துக்கொள்ள கொடுக்கப்பட்ட லஞ்சமே கச்சைத்தீவு. கச்சைதீவு தமிழன் சொத்துதானே என்று தாரைவார்த்தது 'இந்தி'யா. கொடுப்பதற்கு வேறு தீவுகள் இல்லாத காரணத்தினாலோ என்னவோ பின்னாளில் இலங்கையில் உள்நாட்டுக் குழப்பத்தை விளைவித்தது இந்தியா. அப்போது சிங்களக் காடையர்களின் கலவரங்களால் சினமுற்றிருந்த ஈழத்தமிழ் இளைஞர்கள் இலகுவாகவே இந்திய வலையில் வீழ்ந்தார்கள்.

இப்படியாக ஈழத்தின் ஆயுதப்போராட்டம் உருவாகி வளர்ந்துவந்த நிலையில் மத்திய அரசின் 'ரா' அமைப்பு இயக்கங்களுக்குள் பிரிவினையையும் வளர்த்துவந்தது. எந்த ஒரு இயக்கத்தின் கையும் மேலோங்கக் கூடாது என்பதில் முனைப்பாக இருந்தது. கிட்டத்தட்ட அப்போது இருந்த 32 இயக்கங்களில் புலிகள் மட்டுமே 'ரா'வை செவிமடுக்கவில்லை. அதனால் புலிகளை அடக்கவேண்டிய தேவை 'ரா'வுக்கு வந்தது. டெலோ இயக்கத்தின் மூலம் புலிகளை ஒழிக்கும் ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. புலிகளோ பதுங்கிக் கொண்டார்கள். நிலைமை கைமீறுவதைக் கண்டு ஒரு கட்டத்தில் புலிகள் டெலோ உட்பட எல்லா இயக்கங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார்கள்.

இந்தக் கட்டத்தில் ஈழத்தில் ஆட்டுவிக்கும் பொம்மைகள் ஏதும் 'ரா'வுக்கு இல்லை. பிடியை இழந்தாகிவிட்டது. இப்போது என்ன செய்வது? இதே காலகட்டத்தில் வடக்கில் இலங்கை ராணுவம் புலிகளுக்கு எதிராக ஒரு பெரும் நடவடிக்கை ஒன்றை (1987) ஆரம்பிக்கிறது. அப்பாவித் தமிழர்கள் சொல்லொணாத் துயருக்கு ஆளாகிறார்கள். சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்த இந்தியா மனிதாபிமானம் என்கிற முகமூடியைப் பயன்படுத்தி இலங்கையின் 'உள்நாட்டு' விவகாரத்தில் தலையிடுகிறது. இலங்கை இந்திய அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. இதன்மூலம் இந்தியாவுக்கு இரண்டு நன்மைகள். ஒன்று, தம் சொல் கேளாத புலிகளை ஒழித்தல். இரண்டு, இலங்கையை சீனா பாகிஸ்தானுடன் சேராமல் பார்த்துக்கொள்ளல்.

பிரச்சினைக்குள் இருந்தவர்கள் தமிழர்களும் சிங்களவர்களும். ஆனால் ஒப்பந்தம் இட்டதோ சிங்களவரும் இந்தியாவும்.சரி ஒப்பந்தம்தான் செய்தார்கள். புலிகளின் சம்மதத்தைக் கேட்கவில்லை. அந்த ஒப்பந்தத்தை புலிகளின் தொண்டைக்குழியில் திணித்தார்கள். பிரபாகரனை நாடு கடத்தி புலிகளின் கைகளை முறுக்கினார்கள். வேறு வழியில்லாமல் புலிகளும் ஒத்துக்கொண்டார்கள். புலிகள் ஒப்பந்தப்படி ஆயுதங்களை ஒப்படைக்கிறார்கள். ஆயுதங்களை இந்தப்பக்கம் இந்தியப்படை வாங்கிக்கொண்டிருக்க மறுபுறத்தில் புலிகளுக்கு எதிரான தனது கைப்பாவை அமைப்பு ஒன்றுக்கு ஆயுதங்களை வழங்குகிறது 'ரா'. இதை அறிந்த புலிகள் ஆயுதக் கையளிப்பை நிறுத்துகிறார்கள். தொடர்ந்து நடந்த சம்பவங்களில் திலீபன் உட்பட பல போராளிகள் உயிர் துறக்கிறார்கள். தமிழர்கள் கொந்தளிக்கிறார்கள். எங்கும் ஆர்ப்பாட்டம், பேரணி. அப்போது இந்திய ராணுவக் கட்டளை அதிகாரி ஹர்கிரத் சிங்கிற்கு ஜே.என்.தீட்சித் மூலம் ஒரு உத்தரவு வருகிறது. பிரபாகரனைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்து ஆளை முடித்துவிடும்படி. அமைதிப் பேச்சுக்கு வரும் ஒருவரை சுட்டுக்கொல்ல முடியாது என்று தெரிவித்து விடுகிறார் சிங். இவர் பின்னாளில் மாற்றப்பட்டது வேறு கதை. இந்தச் சமயத்தில் அமைதியின்மைக்கு புலிகளைக் குற்றம் சுமத்தி அவர்களை அழிக்கும் முயற்சியில் இறங்குகிறது இந்தியா. புலிகள்‍ இந்தியப் படை மோதல் உருவாகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் இந்திய ராணுவத்தால் கொல்லப்படுகிறர்கள்.

பின்னர் இலங்கையில் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தின் பின் ஆட்சி ஏறிய பிரேமதாசா இந்தியாவை வெளியேறும்படி பணிக்கிறார். இந்திய ராணுவம் வெளியேறுகிறது. சில வருடங்கள் கழித்து ராஜீவ் கொல்லப்படுகிறார். இந்தியா இலங்கை விவகாரத்திலிருந்து பெருமளவில் ஒதுங்கிக் கொள்கிறது. புலிகள் அபரிமித வளர்ச்சி காண்கிறார்கள். தமிழர் நிலங்களில் முக்கால்வாசியை இலங்கை ராணுவத்திடமிருந்து மீட்டெடுக்கிறார்கள்.

சிக்கலுக்குள்ளான இலங்கையை மீட்க மறுபடியும் உள்நிழைகிறது இந்தியா (2005). இம்முறை கொல்லைப்புற வழியாக. நிலங்களைப் பெருமளவு மீட்டுவிட்ட புலிகளுக்கு அப்போதைய தேவை தமிழ் ஈழ தேசத்துக்கான சர்வதேச அங்கீகாரம். ஆனால் இந்தியாவோ ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா மற்றும் கனடா போன்ற நாடுகளில் புலிகளுக்குத் தடையைக் கொண்டுவர இலங்கை அரசுக்கு உதவியதோடு மட்டுமல்லாமல் இலங்கை அரசுக்கு ராணுவ தளபாடங்கள், ஆலோசனைகள் மற்றும் நிபுணர்களை வழங்குகிறது. இலங்கை ராணுவம் புலிகள் பகுதிகளுக்குள் நுழைந்து பல பிரதேசங்களைக் கைப்பற்றுகிறது. புலிகள் வலிந்த தாக்குதல்கள் எதையும் செய்யாமல் சர்வதேச அங்கீகாரத்துக்கான வேலைகளைச் செய்கிறார்கள்.

இதற்கு முதல் தேவை இந்தியாவில் புலிகளுக்கு உள்ள தடையை நீக்குவதாகும். இந்தியாவில் நீங்கினால் மற்றைய நாடுகள் எல்லாம் வரிசையாக நீக்க தமிழீழம் உருவாகும். இழந்த நிலங்களை மீட்பது எல்லாம் புலிகளுக்கு அவ்வளவு கடினமான காரியமாக இருக்கப்போவதில்லை.

இப்போது சொல்லுங்கள். இந்தியா தடையை நீக்கவேண்டுமா கூடாதா?

-புலோலியான்

ISR Selvakumar said...

நிகழ்கால அரசியல் சிக்கல்கல் காரணமாக, தமிழக அரசோ, இந்திய அரசோ கண்டிப்பாக நேரடியாக புலிகள் ஆதரவு நிலையை எடுக்கமுடியாது. ஆனால் அப்படி ஒரு ஆதரவு தேடும் நிலையை புலிகள் மேற்கொண்டே ஆக வேண்டும், அதற்கு இன்னும் 50 வருடங்கள் ஆனாலும் சரி.

நீங்கள் கூறியது போல புலிகள், இந்தியாவிடம் அரசியல் சரணாகதி அடைந்தால், இலங்கை உடனே ஈழத்தமிழர்களுக்கு அங்கீகாரம் கொடுத்துவிடுமா? நிச்சயம் அப்படிச் செய்யாது என்றுதான் நான் நினைக்கிறேன்.

ISR Selvakumar said...

அனானியாக வந்து பின்னூட்டமிட்டிருக்கும்,அன்புள்ள புலோலியோன், உங்கள் பின்னூட்டத்திலிருந்து நான் பல பிண்ணனித் தகவல்களை (இன்னும் உறுதிசெய்யப்படாத பல) தெரிந்துகொண்டேன்.

//அப்போது இந்திய ராணுவக் கட்டளை அதிகாரி ஹர்கிரத் சிங்கிற்கு ஜே.என்.தீட்சித் மூலம் ஒரு உத்தரவு வருகிறது. பிரபாகரனைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்து ஆளை முடித்துவிடும்படி. அமைதிப் பேச்சுக்கு வரும் ஒருவரை சுட்டுக்கொல்ல முடியாது என்று தெரிவித்து விடுகிறார் சிங். இவர் பின்னாளில் மாற்றப்பட்டது வேறு கதை.//

நீங்கள் சொல்லியிருப்பவை தகவல்களா, யூகங்களா என்பதை என்னால் அனுமானிக்க முடியவில்லை. ஆனாலும் நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ள சம்பவங்கள் உங்கள் நிலையை உறுதிப்படுத்திக்கொள்ள, நீங்கள் நம்புகின்ற யூகமே என்று நான் நினைக்கிறேன்.

ISR Selvakumar said...

ராஜா,

// உங்க‌ளுக்கு ஞாநி மேல் என்ன‌ கோப‌ம்? அவ‌ர் சொல்லும் வார்த்தையில் என்ன‌ த‌வ‌று? //

ஞாநி எழுத்துக்களை நான் இப்போதும், எப்போதும் விரும்பி வாசிப்பவன். ஆனால் தற்போது, அவருடைய விசாலமான பார்வை சுருங்கி, கருணாநிதி எதிர்ப்பு என்ற கோணத்திலேயே அமைந்துவருகிறது. அது அவருடைய எழுத்தில் அவரை அறியாமல் கட்டுக்கடங்காமல் வழிகிறது. அது எனக்கு நிச்சயம் பிடிக்கவில்லை.

//க‌ருணாநிதிக்கு த‌மிழின‌த்தின் மீது அக்க‌ரை வ‌ரும்போதெல்லாம் அவ‌ருடைய‌ அர‌சிய‌ல் சூழ்நிலையை பார்த்தீர்க‌ள் என்றால் அக்க‌ரை மீது ஏன் அக்க‌ரை வ‌ந்த‌து என்று தெரியும்.//

கருணாநிதி வரும்போது மட்டும்தான் ஈழத் தமிழர்களுக்கான ஆதரவாளர்கள் குரல் கொடுக்க முடிகிறது. மற்ற நேரங்களில் அமுக்கி வைக்கப்படுகிறது. இதை 'ஞாநி வகையறாக்கள்' ஒப்புக்கொள்வதில்லை.

ராஜரத்தினம் said...

\\கருணாநிதி வரும்போது மட்டும்தான் ஈழத் தமிழர்களுக்கான ஆதரவாளர்கள் குரல் கொடுக்க முடிகிறது. மற்ற நேரங்களில் அமுக்கி வைக்கப்படுகிறது. இதை 'ஞாநி வகையறாக்கள்' ஒப்புக்கொள்வதில்லை.\\

அந்த‌ நிலைமையெல்லாம் 1991 பிற்குதான். அமுக்கி வைக்க‌ப்ப‌ட்டால்தானே அது நியாய‌ம்.ஈழத் தமிழர்களுக்கான ஆதரவாளர்கள் குரல் கொடுக்க ஆர‌ம்பித்தால் கடைசியில் அது புலிக‌ள் ஆத‌ர‌வு என்ற‌ நிலையில் தான் முடியும். கருணாநிதி வரும்போது மட்டும்தான் இது போன்ற‌ தேச விரோத‌ செய‌ல்க‌ள் அதிக‌மாகின்ற‌ன‌ என்ப‌து ம‌றுக்க‌ முடியாத உண்மை.

ISR Selvakumar said...

//ஈழத் தமிழர்களுக்கான ஆதரவாளர்கள் குரல் கொடுக்க ஆர‌ம்பித்தால் கடைசியில் அது புலிக‌ள் ஆத‌ர‌வு என்ற‌ நிலையில் தான் முடியும்.//

உண்மைதான். அப்படித்தான் ஆகிவிடுகிறது. இதில் அவலம் என்னவென்றால், கம்யூனிஸ்டுகளின் 'ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு - புலிகளுக்கு எதிரப்பு' போன்ற நடுநிலைக் குரல்களை யாரும் கண்டுகொள்வதில்லை. புலிகள் எதிர்ப்புப் பிரச்சாரத்தில் அதுபோன்ற மெல்லிய குரல்களும் காணாமல் போய்விடுகின்றன.

இந்திய அரசு ஈழத்தமிழர் ஆதரவாக ஓங்கிக் குரல் கொடுத்தால் 'புலிகள் ஆதரவு குரல்கள்' தேய்ந்துவிடும். ஆனால் இதுவரை ஒருமுறை கூட அப்படி நடந்தது இல்லை.

//கருணாநிதி வரும்போது மட்டும்தான் இது போன்ற‌ தேச விரோத‌ செய‌ல்க‌ள் அதிக‌மாகின்ற‌ன‌ என்ப‌து ம‌றுக்க‌ முடியாத உண்மை.//

புலிகளை ஆதரிக்காத நடுநிலையாளர்களின் மெல்லிய குரல்களும், கருணாநிதி இருக்கும்போதுதான் ஒலிக்க முடிகிறது என்பதுதான் நிதர்சனம்.

Senthil said...

good article wiht very valid arguemnts.happy that u have countered the rhetoric of the
misleading article written by this
gnani.
naanum oru kuttu kuttukireen

Anonymous said...

புலோலியானின் கருத்து: //அப்போது இந்திய ராணுவக் கட்டளை அதிகாரி ஹர்கிரத் சிங்கிற்கு ஜே.என்.தீட்சித் மூலம் ஒரு உத்தரவு வருகிறது. பிரபாகரனைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்து ஆளை முடித்துவிடும்படி. அமைதிப் பேச்சுக்கு வரும் ஒருவரை சுட்டுக்கொல்ல முடியாது என்று தெரிவித்து விடுகிறார் சிங். இவர் பின்னாளில் மாற்றப்பட்டது வேறு கதை.//

செல்வாவின் கருத்து: //நீங்கள் சொல்லியிருப்பவை தகவல்களா, யூகங்களா என்பதை என்னால் அனுமானிக்க முடியவில்லை. ஆனாலும் நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ள சம்பவங்கள் உங்கள் நிலையை உறுதிப்படுத்திக்கொள்ள, நீங்கள் நம்புகின்ற யூகமே என்று நான் நினைக்கிறேன்.//

நண்பர் செல்வாவுக்கு,

கீழ்வருவனவற்றைப் படியுங்கள். ஓய்வுபெற்ற மேஜர்ஜெனரல் ஹர்கிரத்சிங் அவர்கள் தீட்சித் பற்றிச் சொன்னது...

//Once he said, Shoot Prabhakaran, shoot Mahathiah. I said, Sorry I don't do that. Those were his orders. When they came to me at 12 o'clock at night for some work, he said shoot them. General, I have told you what I have ordered. I said, I don't take your orders. And we are meeting under a white flag, you don't shoot people under white flag. //

அவரது முழுமையான பேட்டிக்கு இங்கே செல்லுங்கள்.. பல விடையங்கள் புலனாகும். படித்துவிட்டு உங்கள் நண்பர்களுடனும் இதுகுறித்து விவாதியுங்கள்.

http://tinyurl.com/5fqr9ர்

நன்றி.

புலோலியான்

ISR Selvakumar said...

புலோலியோன் அவர்களே,
நீங்கள் கொடுத்த இணைய முகவரியில் ஏதோ தவறு இருக்கிறது. சரியான முகவரியைத் தரவும்.

ISR Selvakumar said...

வாங்க செந்தில்,
தங்கள் வருகைக்கு நன்றி!

முக்கியமாக உங்களுடைய குட்டுக்கு நன்றி!

நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுத்த மற்ற நண்பர்களுக்கும் நன்றி!

ISR Selvakumar said...

இந்திரஜித் அவர்களே,
உங்கள் வருகையும், பதிவும் ஒரு மூன்றாம் பார்வையை திறந்திருப்பதாக நினைக்கிறேன். நான் உட்பட அனைவரும் இலங்கைத் தமிழர்கள், புலிகள் ஆதரவு அல்லது எதிர்ப்பு நிலையிலிருந்து பேசிக் கொண்டிருக்கிறோம்.

இலங்கையை தாய்நாடாகக் கொண்ட, நடுநிலை வகிக்கும் சிங்கள மக்கள் சார்பாக உங்களுடைய கருத்துக்களுக்கும், கேள்விகளுக்கும் பதில் தேடுவது மிக ஆரோக்கியமானதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

இதில் விசித்திரம் என்னவென்றால் இந்திய இறையாண்மையை பாதிக்கிறார்கள் என்பதற்காகத்தான் வை.கோ, சீமான் மற்றும் அமீரின் கைது. அதே காரணங்கள் இலங்கையின் இறையாண்மையையும் பாதிக்கும் என்று நீங்கள் கூறுகிறீர்கள். இந்தக் கைதுகளை நடத்திய கருணாநிதியும் அதே நிலையில் இருப்பதாக கூறுகிறீர்கள். ஒரு இலங்கை பிரஜையாக இருந்து பார்த்தால் நீங்கள் சொல்வது ஏற்கக் கூடியதே.

இலங்கை பிரச்சனையில் இன்னொரு நுனியை நீங்கள் தொட்டிருப்பதாக நினைக்கிறேன்.

மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் எனப் பார்ப்போம்.

Anonymous said...

மன்னிக்கவும் நண்பர் செல்வா.. இதோ சரியான இழை.

http://tinyurl.com/5fqr9r

நன்றி.

புலோலியான்

Anonymous said...

//இலங்கையின் இறையாண்மைக்கு உலைவைக்கும் தமிழக அரசியல்! //

இலங்கை என்கிற தேசத்தின் இறையாண்மை என்பது 60 ஆண்டுகள் மட்டுமே பழமையானது. ஆனால் ஈழத்தமிழனின் சகாப்தமோ சில ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஏதோ வெள்ளைக்காரன் வந்து ஈழத்தமிழனின் யாழ் இராச்சியத்தையும், சிங்களவனின் கண்டி மற்றும் கோட்டை இராச்சியங்களையும் ஒன்றாக இணைத்து சிலோன் என்று பெயரிட்டதனால் அது எல்லாம் ஒரு இறையாண்மையா?

பல்லவ நாட்டை மைசூர் சமஸ்தானத்துடன் இணைத்து கர்நாடகம் என்று பெயரிட்டால் தமிழகம் விட்டுவைக்குமா? இதை எதிர்த்து தமிழகம் கேள்வி கேட்டால் கர்நாடகாவின் இறையாண்மை பாதிக்கக்கூடாது என்று யாராவது சொன்னால் என்ன செய்வீர்கள்? :O))

-புலோலியான்

ISR Selvakumar said...

நண்பர் செந்தில் அவருடைய பதிவு ஒன்றின் இணைப்பை மின்னஞ்சல் செய்திருந்தார்.

மற்ற நண்பர்களும் படிக்கலாம்.

http://crashonsen.blogspot.com/2008/01/noam-chomsky.html

புலோலியான் said...

நண்பர் செல்வா..

இனிமேல் அனானியாக வந்து உங்களைத் தொல்லை செய்ய மாட்டேன். :):):)

அதுசரி.. நான் கொடுத்த இணைப்பைப் பார்த்தீர்களா?

ISR Selvakumar said...

நண்பர் புலோலியோன் அவர்களுக்கு,
நீங்கள் கொடுத்த இணைப்பை படித்துக் கொண்டிருக்கிறேன். மீண்டும் . . . மீண்டும் . . . மீண்டும்

அத்திரி said...

என்னைப் பொறுத்தவரைக்கும் இப்போதுள்ள ஈழப் போராட்டங்கள் வெறும் அரசியல் நாடகம் தான். இந்த விசயத்தில் எங்கே கலைஞர் பெயர் வாங்கிவிடுவாரோ என்ற எண்ணத்தில் ஜெயாவும், விசயகாந்தும் தங்களுடைய அரசியல் லாபத்துக்காக ஒதுங்கியிருக்கிறார்கள்.அரசியல் நோக்கம் இல்லாமல் பொது நோக்கோடு இவ்விசயத்தை அணுகினால் நல்லது நடக்கும். ஆனால் தமிழக அரசியல் வரலாற்றில் பொது நோக்கம் என்பது பெருத்த சந்தேகத்துக்குறியது.

ISR Selvakumar said...

புலோலியோன்,
நீங்கள் கொடுத்திருக்கும் தகவல்களை, உறுதிபடுத்திக்கொள்ள ஏதாவது இணைப்புகள் உண்டா?