Sunday, August 17, 2008

குசேலன் படத்தின் எடிட்டர் தூங்கிவிட்டாரா? அல்லது கத்துக்குட்டியா?

குசேலன் படத்தை இரண்டாவது முறையாக பார்க்க நேர்நதது. முதல் முறை எனக்காகவும் என் மனைவிக்காகவும். இரண்டாவது முறை எனது மகளுக்காகவும் எனது அம்மாவுக்காகவும். இரண்டு முறையும் இன்டர்வெல்லில் அதே பாப்கார்ன். ஆனால் இன்டர்வெல்லுக்கு அப்புறம் ஒரு சிறிய மாற்றம். ஆர்.சுந்தர்ராஜன் ஒரு நடிகன் என்கிற மாயையை கேள்விகளால் துளைத்தெடுக்கும் Demystify காட்சியில் 'முக்கியமான சில அரசியல் தொடர்பான கேள்விகளைக் காணோம்'.

இந்தப் படத்தின் எடிட்டர் யார்? மகா மட்டமான எடிட்டிங். எங்கே நீளத்தை கூட்ட வேண்டுமோ அங்கே கத்தரி போட்டிருக்கிறார். எங்கே வெட்டி எறிய வேண்டுமோ அங்கே தூங்கியிருக்கிறார். குறிப்பாக படத்தின் ஒரே உருப்படியான ரஜினியின் மேடைப் பேச்சுக்குப் பின், யாருடைய ரியாக்சனையும் காட்டாமல் நேராக ஆர். சுந்தர்ராஜனை கதவைத் திறந்து வெளியே கொண்டு வந்துவிட்டார். அதனால் கொஞ்சம் பில்ட் அப் ஆன ரியாக்ஷனும் பாதியிலேயே அம்பேல் ஆகிவிட்டது.

அதே போல ரஜினி, ஆர்.சுந்தர் ராஜன் முதல் அல்லது ஒரே சந்திப்பிற்குப் பின் நேரடியாக ரஜனியின் எகிப்து செட்டிங் டான்சுக்கு வந்திருந்தால், ரசிகர்கள் விசிலடித்திருப்பார்கள். ஆனால் நடுவில் மீண்டும பசுபதியை அழவைத்து டெம்போவை காலி பண்ணிவிட்டார். ஆனால் இதற்கு டைரக்டர் தான் காரணமாக இருந்திருப்பார் என்பது என் சந்தேகம்.

அதே போல லிவிங்ஸ்டன் அண்டு லூசு கும்பல் வரும்போதெல்லாம் அவர்களுடைய ஜீப் மறக்காமல் ஒரு என்ட்ரியும் எக்ஸிட்டும் கொடுக்கிறது.

வடிவேலு நயனதாராவை ஜொள்ளுவிடுகிற காட்சிக்கு அப்புறம் நயன்தாரா தனியாக சோலோ பாட்டு பாடுகிறார். வடிவேலுவை அந்த பாடல் காட்சியிலேயே சேர்த்திருந்தால் ஏதோ ஓரளவுக்கு லாஜிக் இருந்திருக்கும்.

படம் முழுக்கவே எமோஷன் ரியாக்ஷன் ஷாட்ஸ் எல்லாம் தப்புத்தப்பாக இருக்கிறது. மக்கள் வெள்ளத்தைக் காட்டும்போது, பிண்ணனியில் மக்கள் கூச்சல், ஆனால் காட்சியில் மரம் போல மக்கள் அசையாமல் நிற்கிறார்கள்.
கிளைமாக்ஸ் காட்சியில் எல்லா ரியாக்ஷன் ஷாட்டுகளிலும் அனைவரும் குற்றவாளிகளைப் போல தலையை குனிகிற ஷாட்டுகளாகவே இருக்கிறது.

என்னை விட்டால் ஷார்ப்பாக இன்னும் 30 நிமிடத்தை குறைத்து படத்தின் சில காட்சிகளை முன்னே பின்னே போட்டு இன்னும் சுவாரசியமாக்குவேன்.

தற்போது சத்தியம் படத்திலிருந்து 20 நிமிடத்தை நீளம் குறைக்கப் போகிறார்கள் என்று கேள்வி. பார்த்துவிட்டு என்னுடைய கமெண்டுகளை சொல்லுகிறேன்.

2 comments:

மங்களூர் சிவா said...

/
வடிவேலு நயனதாராவை ஜொள்ளுவிடுகிற காட்சிக்கு அப்புறம் நயன்தாரா தனியாக சோலோ பாட்டு பாடுகிறார்.
/

இதைத்தான் நேரக்கொடுமை அப்படிங்கறாங்களா???

Anonymous said...

solo means 'thaniya' then, what is the point of saying 'thaniya solo' ??
:)